Trust are organized on local, national and international levels to serve specific social or political purposes
Trust has set up a tailoring class in sivagangai region for the trainees accompanied by caretakers.
With no annual account fee and acceptance at thousands of stores nationwide, Farmers Finance Card is the perfect credit card for your everyday purchases.
Augmenting the water resources by constructing new ponds and renovating existing ponds
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களிடத்தில் இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழு வின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மீனாட்சி டிரஸ்ட் நிறுவனர் தனிக்கொடி கலந்துகொண்டு விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்கள். லெட்சுமிபுரம் , சவேரியார்பட்டணம், பெத்தனேந்தல் கிராம மக்கள் 110 பேர்கள் கலந்து கொண்டனர் . முகாமில் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.
இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழு வின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் கண்ணமங்கலம் வருவரய் கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் மீனாட்சி டிரஸ்ட் நிறுவனர் தனிக்கொடி மற்றும் சட்ட தன்னார்வலர் செய்யது அலி, இளவரசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பற்றி பேசி அனைவருக்கும் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்கள். முகாமில் கண்ணமங்கலம், சவேரியார்புரம், சங்கயாபுரம் மக்கள் 120 நபர்கள் கலந்து கொண்டனர்
வைகை ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற விவசாயிகளின் பச்சைத் துண்டு பேரணி சமாதான கூட்டத்தில் உடன்பாடு. காவிரி -வைகை- கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து விரகனூர் மதகு அணை வரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி நடத்த முடிவு செய்தனர்.
காலை 9.00 மணிக்கெல்லாம் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுடன் மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் பார்த்திபனூர் மதகு அணைக்குத் திரண்டு வந்தனர். ஆனால் இருசக்கர வாகனப் பேரணிக்கு சிவகங்கை மாவட்ட காவல்துறை நேற்றே அனுமதி மறுத்து கடிதம் அனுப்பியிருந்தனர்.
இருந்தபோதிலும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டபடி பேரணி நடத்த முடிவு செய்து அணைப் பகுதிக்கு திரண்டு வந்து விட்டனர். இதனை அறிந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.த. செந்தில்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அன்பு, மானாமதுரை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு. சுந்தரமாணிக்கம், மானாமதுரை காவல் ஆய்வாளர் திரு. ஆதிலிங்கம் போஸ், சார்பு ஆய்வாளர்கள் முருகானந்தம், நாச்சாங்காளை மற்றும் உளவுத்துறை, குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் என பார்த்திபனூர் அணைக்கு நேரில் வந்தனர்.
பின்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாநில நிர்வாகிகளான திரு. எம்.அர்ச்சுணன் (பொதுச்செயலாளர்) மிசா' மாரிமுத்து (மாநிலத் தலைவர்) இராம. முருகன் (மாநிலச் செயலாளர்) எஸ். உறங்காப்புலி (மாநிலப் பொருளாளர்) மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராமநாதபுரம், மு.மலைச்சாமி. விருதுநகர் A.கோபாலகிருஷ்ணன், சிவகங்கை பா.அய்யனார் ஆகியோருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில்.... சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு நிரந்தரமாக வைகையாற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிட வலியுறுத்துவது என்றும், 72 -க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படும் இந்த பகுதிகளில் இனிமேல் மணல் குவாரிகள் அரசு அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என்றும், தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு மூலம் தமிழக அரசுக்கு கள நிலவரம் பற்றிய தகவல்களை காவல்துறையே விளக்கி தமிழக அரசு மணல் குவாரிகள் வைகை ஆற்றில் அமைப்பதை கைவிட வலியுறுத்துவது என்றும், கேட்டுக் கொண்டதின் பேரில் விவசாயிகள் நடத்த இருந்த இருசக்கர வாகனப் பச்சைத் துண்டுப் பேரணி தற்காலிகமாக ஒத்திவைப்பது. என்றும் சமதான உடன்பாடு ஏற்பட்டது.
அன்று விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் அவர்கள் ராகுல் காந்தி அவர்களை சந்தித்த மலரும் நினைவுகள்
Even the all-powerful Pointing has no control about the blind texts it is an almost un orthographic life
Establishment of educational institution for the betterment of such downtrodden people if possible.
Enhancing the skills and capabilities of the women, Employment generation and livelihood improvement.
Creating cooperative movement for the welfare of people below poverty line so as to achieve financial stability among them
Motivating the youths the habit of sports club in their localities.
Implanting of varied saplings of trees for improving the afforestation in the rural areas.
Please contact us if you want to do charity through the mailbox.